The ‘Great Heroes Day’
சிதைக்காதே! சிதையாதே!
The ‘Great Heroes Day’
Notwithstanding brazen efforts by vested interests to depict ‘Maaveerar Naal’ falling on 27 November as a day of general Tamil mourning, it must be emphasised that the so-called ‘Great Heroes Day’ was never a national day of Tamil mourning. The ‘Maaveerar Naal’ was an intensely conducted partisan event “of the Tigers, for the Tigers and by the Tigers”. To portray it otherwise as some are doing, including stalwarts of the Tamil National Alliance (TNA), is sheer political hypocrisy. This does not mean that Tamils do not mourn the loss of their loved ones. They do. The Tamils have lost those dear and near to them in the communal violence of 1956, 1958, 1977, 1981 and 1983. They have suffered innumerable losses in many forms during the long years of the war. There cannot be a single Tamil living who has not suffered the loss of a loved one during the years of violence and war. What is unacceptable however is the deception to depict the ‘Maaveerar Naal’ as a day of universal Tamil mourning.
Why was 27 November chosen to be ‘Maaveerar Naal’? It was to commemorate the first Tiger to die fighting the Sri Lankan armed forces. The first-ever Liberation Tigers of Tamil Eelam (LTTE) member to embrace death in combat was Sathiyanathan of Kambarmalai. Sathiyanathan alias Shankar also known as Suresh died on 27 November 1982. Seven years after Shankar’s death in 1989, around 600 LTTE cadres assembled at a secret venue in the Mullaitivu District jungles of Nithikaikulam on 27 November. The occasion was the newly-proclaimed Great Heroes Day or Maaveerar Naal as known in Tamil
சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம் வெந்துதணியாது வீரநிலம் …!
கார்த்திகைமாதம் வேர்த்தறியாக்காலம்.
மேகமுந்தானை விலக்கி
வானத்தாய் பூமிக்குப் பால்கொடுப்பாள்.
வேர்கள் விருட்சத்துக்கு விருந்தளிக்கும்.
நீரும் நிலமும் கலந்திளகி
பூமிப்பெண் புத்தாடை புனைவாள்.
ஆயிரம் காணவேண்டும் அதைக்காண.
ஊரின் ஒழுங்கையெங்கும்
வாரடித்தோடும் வெள்ளம் வரைகின்ற
நீரரித்த கோடுகளில் பாதம்பதிக்க
உச்சிகுளிர்ந்து உருகும்.
மருதாணி போட்ட அழகான விரலாய்
மண்கிழித்தெழும் காளான்மடை
பூனைமேனிப் புசுபுசுப்பாய்
சின்னக்குடை விரித்துச் சிரிக்கும்.
கூரைவழியும் நீர்த்தாரை மீது
திண்ணை மீதிருந்து திளைப்பதில்
என்ன ஆனந்தம்.
மனசில் பூபரவிப் போகும் இந்த மாதம்.
வீரத்தைக் கொண்டே விரல்மடிப்பதெனில்
கார்த்திகை மாதமே எமக்குக் கண்திறந்த மாதம்.
ஈழத்தமிழருக்கு இருநூறு கைமுளைத்ததும்,
ஈழத்தமிழரையே கூறிய வேல்துளைத்ததும்
இந்த மாதத்திற்தான்.
தமிழரை மீண்டும் தமிழறேன்றாக்க
முதல்நாள் பிள்ளையொன்று விழிதிறந்தது
தமிழரின் நெஞ்சில் இடிசொருகிவிட்டு
மறுநாள் பிள்ளையொன்று விழிமூடியது.
ஆண்டுகள் வேறாயினும் தேதிகள் அருகருகாயின
இது தற்செயலான சம்பவமல்ல
ஒரு சரித்திரமான அதிசயம்.
கார்த்திகை 27 மாவீரர் நாள்.
சாவிலும் மானம் பெரிதென்று சாற்றியநாள்.
ஈழத்தமிழர் இழந்திருக்க மாட்டோமென
ஆளும் கதிரைகளுக்கு அறிவித்த நாள்.
கூண்டிருக்க இனிவிரும்போமென
நீண்ட காலத்தின் பின் நிறுவிய நாள்.
சிறகெடுத்துப் பறந்த சிட்டுக்குருவிகளின்
தீபத்திருநாள்.
ஊனக் கனவேதுமற்ற ஞானத்துறவிகளின்
உயிர்தநாள்.
தேசத்தை மட்டும் ஆராதிக்கத் தெரிந்தவரின்
வாதம் பரவும் அந்த வாசல்.
மெழுகாய் விழியுருக
மெய் விதிர்க்க
அழுவோராயும்,
தொழுவோராயும்
பூக்கொண்டு போவோம் அப்புனிதரிடம்.
நெஞ்சுருக, நெஞ்சுருக நெய்விளக்கேற்றிக்
கலரை முன்னின்று கரைவோம்.
ஒருதரமேனும் விழிமலருங்களென்று உருகுவோம்.
பூச்சொரிந்து அவர் பாதம் பூசிப்போம்.
வல்லமை தாருங்களென வரம் கேட்போம்.
வில்லாண்ட வீரத்தின் ஒருதுகளை
வெளியே எறியுங்களென வேண்டுவோம்.
நதியாக் குதித்தோடிய நாட்களும்,
பூவாய்ச் சிரித்திருந்த பொழுதுகளும்
நினைவிருக்கா? எனக் கெஞ்சுவோம்.
உள்ளே வேர்பிடித்திருக்குமா உங்களுக்கென
காதோடுரசிக் கேட்போம்.
கல்லறைக்குள்ளே கண்மலரும்.
மேனி அசையும்.
மெல்லச் சிரிக்குமொலி உள்ளே கேட்கும்.
கல்லறைக் கதவுகள் விரியப்
பிள்ளை முகம் காண்பாள் பெற்றவள்.
“அம்மா” என்றோர் அசரீரி
அவளுக்கு மட்டும் கேட்கும்.
“அப்பா” என்றோர் குரல்
அவருக்கு மட்டும்தான் கேட்கும்.
தோழனே ! என்ற குரல் மட்டும்
துயிலுமில்லமெங்கும் கேட்கும்.
தோழியே ! என்ற குரல் மட்டும்
திசையெங்கும் எதிரொலிக்கும்.
குரல் கேட்டதும்
அந்தக்குளிரிலும் வேர்த்துக்குளிப்போம்
சில்லிட்டுப் போகும்மெம் ஜீவன்.
புதைக்கவில்லை விதைத்தோமேன்ற
பொருளுணர்ந்து பெருகுமெம் விழிகள்
உள்ளே கொதிப்புறும் குருதி.
சுடரும் விளக்கொளியில் மேனிசூடேறும்.
ஒவென்றிரையும் ஊதற்காற்று.
வானம் இருள்விலத்தி வழிவிடத்
தூரத்தில் தெரியும் விடிவெள்ளி.
பிரிய மனமின்றிப் பிரிவோம்.
மாவீரரே!நடுக்கல்லாகிவிட்ட நந்தா விளக்குகளே !
விடுதாளிக்கு நீர் தந்த விலையதிகம்.
உரிமைக்கான போரில் உயிர்கொடுத்தலே
பெரியபேறு.கவிதை எழுதுதல் கால்தூசு.
கண்ணீர் விடுவதாலும் கையளவே.
மண்ணுக்காக மரணிப்பதே மாதவம்.
ஒன்றுமட்டும் உறுதி,
இனியுமெம் தேசம் படுக்காது.
குனிந்தெவருவருக்கும் குற்றேவல் செய்யாது.
தேவநிலை வந்தெய்தினும்
தாயகக் காதல் மட்டும் தணியாது.
சாவரினும் தளரோம் இதுசத்தியம்
யார்வரினும் பணியோம் இதுசத்தியம்
போரெடுத்தோம் வெல்வோம் இதுசத்தியம்
வெந்துதணியாது இந்த வீரநிலம்.
பகையுழுது போகலாம் உங்கள் படுக்கைகளை
தகையழிந்து போகுமோ சந்தனக்காடுகள்?
வேரறுந்து வீழுமோ விடுதலை?ஊரெரிந்தும்,
உயிர்பிரிந்தும் போகலாம்
பிரியும் நொடியிலும் உம்மையே பேசுமெம்வாய்.
விரியும் மலரிலும் தெரியுமும் முகம்.
உமக்கருகில் எமக்கும் வேண்டும் ஒர்குழி.
உறவுகள் வந்து விளக்கேற்ற
உள்ளேயிருந்து நாமும் சிரிப்போம் ஓர்நாள்.
அதுவரை ஓயாதேம் அலைகள்.
எத்தனை புயல்களும் எழுந்து வீசட்டும்.
சித்தம் கலங்கிக் சிதறோம்.
எத்தனை துயரெனினும் அழுத்தட்டும்
அத்தனை வரிப்புகளையும் ஆனந்தமாக்குவோம்.
விடுதலை எங்களின் பேச்சு.
விடுதலை எங்களின் மூச்சு.
விடுதலை நெஞ்சிற் பதியம்போட்ட நாற்று.
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி.
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி.
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி.
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி.
சிதைக்காதே! சிதையாதே!
உலகத்தமிழரை
ஒன்றிணைக்கும்
ஒற்றைச்சொல்
மாவீரர்!
அழகுத்தமிழை
அரியணையிலேற்றி
உயரிய வாழ்வினை
உவந்தளித்தவர்
மாவீரர்!
சருகாய் காய்ந்து
மெலிந்து
காலில் மிதிபட்டு
வீழ்ந்த தமிழை
விதையாய் வீழ்ந்து
துளிர்த்து
நிமிர்த்திக்காட்டியவர்
மாவீரர்!
நெருப்பு மழையுக்குள்
எதிரியின் செருக்குடைத்து
உரிமைப்போரின்
உயிர்விளக்காய்
எரிபவர்கள்
மாவீரர்!
சாவின் நேரம் தெரிந்தும்
சற்றும் தளராது
சாதித்துக்காட்டி
விடுதலையின்
சாரதிகளாய்
சத்திய இலட்சியப்
பாதையில்
சந்ததிகளின்
நித்திய வாழ்வின்
நிம்மதிக்காய்
கூட்டிச்செல்பவர்கள்
மாவீரர்!
இத்தனையும்
இதயத்தின் ஆழத்தில்
பசுமரத்தாணியாய்
பதிந்து இருப்பதால்த்தான்
எங்கள்
மாவீரக்கோவில்களை
எதிரியானவன்
கிலிகொண்டு
தகர்த்தான்!அவர்கள்
கல்லறைகளை
சிதைத்தான்!
ஆனால்?
எங்கள்
நெஞ்சறையை
அவனால் சிதைக்க
முடியவில்லை!
மாறாக
வஞ்சம் கொண்ட
மாந்தரின்
வறட்டுக்கௌரவத்தில்
புலத்திலும்
எங்கள் மாவீரர்
கோவில்களை
சிதைக்க முயல்வதுதான்
சினத்தை பிரசவிக்கிறது!
ஓர்மையாய்
நிற்கும்
ஒற்றை இடத்தையும்
பிரிக்க முனைவதுதான்
சகிக்க முடியவில்லை!
ஒவ்வொரு ஆண்டும்
இயற்கையின் அனர்த்தம்போல்
இந்த சிதைப்பும் நின்றபாடில்லை
கனத்த இதயத்தோடு கரையும்
கார்த்திகைத் திங்கள்
கூடவே மனத்தாங்கல்களையும்
தாங்கி நிற்கின்றன…
You may be interested

Greece PM accused of fuelling Elgin Marbles row in ongoing debate | Politics | News
Rajendran Achuthan - Nov 29, 2023[ad_1] The Greek prime minister has been accused of using the Elgin Marbles for his own domestic political goals amid…

U.S. military Osprey aircraft crashes into sea near Japan
Rajendran Achuthan - Nov 29, 2023[ad_1] TOKYO — A U.S. military Osprey aircraft with eight people on board crashed into the sea near an island…

US military Osprey aircraft with eight soldiers on board crashes near Japan | US | News
Rajendran Achuthan - Nov 29, 2023[ad_1] A US Air Force Osprey aircraft crashed off the coast of Yakushima, in the Kagoshima prefecture in southern Japan.Eight…